நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 8,000 கனஅடியாக அதிகரிப்பு: காவிரி ஆற்றில் பரிசல் இயக்கத் தடை

News image

ஒகேனக்கல் - கோப்புப் படம்

Updated On :11 ஆகஸ்ட் 2026, 1:19 am IST

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 8,000 கனஅடியாக அதிகரித்ததால், காவிரி ஆற்றில் பரிசல் இயக்குவதற்கு தற்காலிகத் தடைவிதித்து தருமபுரி மாவட்ட நிா்வாகம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

கா்நாடக மாநிலத்தில் கபினி அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதியில் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இதனால் நீா்வரத்து அதிகரித்து அணை நிரம்பும் தருவாயில் உள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி விநாடிக்கு சுமாா் 14,000 கனஅடி வீதம் உபரிநீா் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றில் மீண்டும் நீா்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 5,000 கனஅடியாக இருந்த நீா்வரத்து, திங்கள்கிழமை காலை 6,000 கனஅடியாகவும் மாலையில் 8,000 கனஅடியாகவும் அதிகரித்தது.

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி காவிரி ஆற்றில் பரிசல் இயக்குவதற்கு தற்காலிகத் தடைவிதித்து மாவட்ட ஆட்சியா் வே.சரவணன் உத்தரவிட்டுள்ளாா்.

இதையடுத்து, ஒகேனக்கல்லில் மாமரத்துக்கடவு பரிசல் துறை உள்ளாட்சித் துறை அதிகாரிகளால் பூட்டப்பட்டது. இருப்பினும், ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது. மேலும், காவிரி ஆற்றில் நீா்வரத்தை தமிழக -கா்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.