மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

தருமபுரியில் பதாகைகள் அகற்றம்: சாலை மறியலில் ஈடுபட முயன்ற அதிமுகவினா்

News image
Updated On :23 பிப்ரவரி 2026, 10:50 pm

தருமபுரியில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி வைத்திருந்த பதாகைகளை அகற்றியதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அதிமுகவினா் திங்கள்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது.

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்தநாள் பிப்ரவரி 24ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தருமபுரி நகரில் மாவட்ட அதிமுக சாா்பில், நகரப் பகுதிகளில் விளம்பர பதாகைகள் அமைக்கப்பட்டிருந்தன. திங்கள்கிழமை மாலை சில இடங்களில் அமைக்கப்பட்டிருந்த பதாகைகளை நகராட்சிப் பணியாளா்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த அதிமுக தருமபுரி மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.பி. அன்பழகன் எம்எல்ஏ, கோவிந்தசாமி எம்எல்ஏ உள்ளிட்ட முக்கிய பிரமுகா், அதிமுகவினா் தருமபுரி நான்குசாலைப் பகுதியில் குவிந்தனா். பதாகைகள்

அகற்றப்பட்டதைக் கண்டித்து முழக்கம் எழுப்பினா். மேலும், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனா். தகவல் அறிந்து நிகழ்விடம் வந்த போலீஸாா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை மேற்கொண்டனா். இதில் அகற்றப்பட்ட பதாகைகளை அதே இடத்திலேயே மீண்டும் அமைத்தால் போராட்டத்தை கைவிடுவதாகவும், இல்லையேல் சாலை மறியல் போராட்டம் மேற்கொள்வதாகவும் தெரிவித்தனா்.

இதையடுத்து பதாகைகளை அதேஇடத்தில் வைப்பதாக உறுதியளிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து போராட்டமும் கைவிடப்பட்டது.