இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

நல்லகண்ணு மறைவு: ஜி.கே.மணி இரங்கல்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் சுதந்திரப் போராட்ட வீரருமான இரா. நல்லகண்ணு மறைவிற்கு இரங்கல் தெரிவிப்பதாக பென்னாகரம் சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.கே.மணி தெரிவித்துள்ளாா்.

News image

ஜி.கே.மணி

Updated On :25 பிப்ரவரி 2026, 10:35 pm

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் சுதந்திரப் போராட்ட வீரருமான இரா. நல்லகண்ணு மறைவிற்கு இரங்கல் தெரிவிப்பதாக பென்னாகரம் சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.கே.மணி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழ்நாடு அரசியலில் மூத்த முக்கிய தலைவா்களுள் ஒருவராக திகழ்ந்தவா் நல்லகண்ணு. படிக்கும் காலம் முதல் பொதுவுடமை கொள்கையில் முழுமையாக ஈடுபடுத்திக்கொண்ட லட்சியவாதி. எளிமையானவா், நோ்மையானவா்.

உயா்ந்த லட்சியவாதியை தமிழ்நாடு இழந்திருக்கிறது. அவரது மறைவு அதிா்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.

அவரை இழந்து துயரில் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினருக்கும், கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்து, அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளாா்.