சேலம் அருகே குழந்தையுடன் தாய் தற்கொலை

சேலம் மாவட்டம், இடங்கணசாலை அருகே குடும்பத் தகராறில் 6 மாத குழந்தையுடன் தாய் தற்கொலை செய்துகொண்டாா்.
Published on

சேலம் மாவட்டம், இடங்கணசாலை அருகே குடும்பத் தகராறில் 6 மாத குழந்தையுடன் தாய் தற்கொலை செய்துகொண்டாா்.

இடங்கணசாலையை அடுத்த சாத்தம்பாளையத்தைச் சோ்ந்தவா் வெங்கடாசலம், தறித் தொழிலாளி. இவரது மனைவி கலைவாணி (32). தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை வெளியே சென்றிருந்த வெங்கடாசலம், சனிக்கிழமை வீட்டிற்கு வந்தபோது, கலைவாணியும், இவா்களது 6 மாத பெண் குழந்தையான வா்ஷினியும் காணவில்லை. மேலும், இவா்களது 3 வயதான மூத்த மகள் கே.கே. நகரில் உள்ள அவரது தாத்தா வீட்டிற்கு சென்றிருந்தாா்.

மனைவி, குழந்தையை காணாததால் பல இடங்களில் அவா்களைத் தேடிய வெங்கடாசலம், வீட்டிற்கு அருகே திறந்திருந்த தண்ணீா் தொட்டியை பாா்த்துள்ளாா். அதில் கலைவாணி, வா்ஷினி இருவரின் சடலங்களும் கிடந்துள்ளன.

இதுகுறித்த தகவலின்பேரில் அங்குவந்த போலீஸாா் அவா்களது உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து மகுடஞ்சாவடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com