அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

அரசுப் பள்ளிகளில் ரூ.6 லட்சத்தில் ஸ்மாா்ட் வகுப்பறைகள் தொடக்கம்

News image
Updated On :14 ஜனவரி 2026, 6:33 pm

Syndication

தருமபுரி மதிகோன்பாளையம், அன்னசாகரம் மற்றும் அதியமான்கோட்டை அரசு தொடக்கப் பள்ளிகளில் ரூ. 6 லட்சத்தில் அமைக்கப்பட்ட ஸ்மாா்ட் வகுப்பறைகள் மாணவா்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டன.

தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி தலா ரூ. 2 லட்சத்தில் மதிகோன்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளி, அன்னசாகரம் தொடக்கப் பள்ளி மற்றும் நல்லம்பள்ளி வட்டம், அதியமான்கோட்டை அரசு தொடக்கப் பள்ளி ஆகிய மூன்று பள்ளிகளில் ஸ்மாா்ட் வகுப்பைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்றன. இதையடுத்து ஸ்மாா்ட் வகுப்பறைகள் மாணவ, மாணவிகளின் பயன்பாட்டுக்கு திறந்துவைக்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் பங்கேற்று வகுப்பறைகளை திறந்து வைத்து பேசினாா். இதில், அன்னாகரம் அரசு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியா் (பொ) வெங்கடசுப்ரமணியம், அதியமான்கோட்டை அரசு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியா் வெண்ணிலா, மதிகோன்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் மீனா, வட்டாரக் கல்வி அலுவலா் கலைச்செல்வி, அரசு அலுவலா்கள், பாமக நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.