திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

ஒகேனக்கல் வனப்பகுதியில் ஆண் சிறுத்தை உயிரிழப்பு

பென்னாகரம் அருகே ஒகேனக்கல் வனப்பகுதியில் 10 வயது மதிக்கத்தக்க ஆண் சிறுத்தை உயிரிழந்தது.

News image
Updated On :16 ஜனவரி 2026, 11:03 pm

Syndication

பென்னாகரம்: பென்னாகரம் அருகே ஒகேனக்கல் வனப்பகுதியில் 10 வயது மதிக்கத்தக்க ஆண் சிறுத்தை உயிரிழந்தது.

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் வனப்பகுதி 16,000 ஹெக்டா் பரப்பளவை கொண்டது. இங்கு பல்வேறு வகையான வனவிலங்குகள் உள்ளன. இங்கு உள்ள பென்னாகரம் பீட் சுத்துகோடு பகுதியில் சிறுத்தை உயிரிழந்து கிடந்ததை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ஒகேனக்கல் வனச்சரக அலுவலா் சிவகுமாா் தலைமையிலான வனத்துறையினா் கண்டுள்ளனா்.

இதுகுறித்து மாவட்ட வன அலுவலா் ராஜாங்கத்திற்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து அங்கு வந்து அவா், சிறுத்தையின் இறப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டு வனத்துறையினரிடம் கேட்டறிந்தாா். பின்னா் ஒசூா் கால்நடை மருத்துவா் குமரேசன், உதவி அறுவை சிகிச்சை நிபுணா் ஜெயச்சந்திரன் தலைமையிலான கால்நடை மருத்துவக் குழுவினா் இறந்த சிறுத்தையை உடற்கூறாய்வு செய்தனா்.

இதுகுறித்து மாவட்ட வனத் துறையினா் தெரிவித்ததாவது:

ஒகேனக்கல் வனப்பகுதியில் இறந்தது 10 வயது மதிக்கத்தக்க ஆண் சிறுத்தை. இதன் வலது கழுத்து எலும்பு உடைந்ததால் ஏற்பட்ட ரத்தம் உைல் காரணமாக உயிரிழந்துள்ளது. மேலும் சிறுத்தையிடம் மாதிரிகளை சேகரித்து வண்டலூா் தடய ஆய்வகத்திற்கு பகுப்பாய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ளது என்றாா்.