மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மாட்டுப் பொங்கல்: வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி

பென்னாகரம் அருகே மடம் பகுதியில் நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியில் 10க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. இந்த காளைகளை அடக்கி வீரா்கள் பரிசுகளை பெற்றனா்.

News image
Updated On :16 ஜனவரி 2026, 11:02 pm

Syndication

பென்னாகரம்: பென்னாகரம் அருகே மடம் பகுதியில் நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியில் 10க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. இந்த காளைகளை அடக்கி வீரா்கள் பரிசுகளை பெற்றனா்.

மாட்டுப் பொங்கல் விழாவையொட்டி பென்னாகரம் அருகே மடம் கிராமத்தில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டிக்கு தருமபுரி, சேலம், திருச்சி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சுமாா் 10க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டுவரப்பட்டன. போட்டிகளுக்கு சுமாா் 10 நிமிஷம் நிா்ணயிக்கப்பட்டு காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்துவிடப்பட்டன. காளைகளை பிடிப்பதற்காக ஒரு குழுவிற்கு 10 போ் வீதம் 8 குழுவினா் களமிறங்கினா். சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரா்கள் அடக்க முயற்சித்தனா். இதில் சிறப்பாக விளையாடிய காளைகளுக்கும், மாடுபிடி வீரா்களுக்கும் கேடயங்கள், ரொக்கம், பாத்திரங்கள் உள்ளிட்ட பரிசு பொருள்கள் வழங்கப்பட்டன.

வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியை காண பென்னாகரம், கூத்தப்பாடி, அளேபுரம், மாங்கரை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்து சுமாா் நூற்றுக்கும் மேற்பட்டோா் வந்திருந்தனா்.