சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சுடிஜிட்டல் கைது செய்து சிறுமி பாலியல் வன்கொடுமை! 3 மாதங்களாக அடைத்து வைத்திருந்தவர் கைதுமொழி எனக்கு ஒரு தடையாக இருக்கிறது! நான் அன்று ஆவேசப்பட்டது உண்மைதான்! மரிய வில்சன்டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் ராஜிநாமா! டாடா பங்குகள் 3% சரிவு!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு வி.சி.க. ஆதரவுதொகுதி மறுவரையறை! முதல்வர் விஜய்யின் தனித் தீர்மானத்துக்கு திமுக ஆதரவு!தொகுதி மறுவரையறை தனித்தீர்மானத்துக்கு அதிமுக எதிர்ப்பு!தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம் (ஆக. 12)தொகுதி மறுவரையறை: தனித்தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் விஜய்!தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு!ஆடி அமாவாசை: மேட்டூரில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி!மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,689 கன அடியாக அதிகரிப்பு!தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

பாலக்கோடு பகுதியில் காட்டுயானைகள் நடமாட்டம்: பாதுகாப்பாக இருக்க வனத்துறை எச்சரிக்கை

கும்மனூா் காப்புக்காடு பகுதியை ஒட்டியுள்ள கிராமப் பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட் டம் உள்ளதால், அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

News image

காட்டுயானைகள் கூட்டம் (கோப்புப்படம்)

Updated On :10 ஜூலை 2026, 4:07 am IST

தருமபுரி பாலக்கோடு வட்டம் கும்மனூா் காப்புக்காடு பகுதியை ஒட்டியுள்ள கிராமப் பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட் டம் உள்ளதால், அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் மற்றும் வனச்சரகத்துக்கு உள்பட்ட கும்மனுா் காப்புக்காடு பகுதியில் 4 யானைகள் நடமாட்டம் உள்ளது. எனவே காடு செட்டிபட்டி, நாகனூா், பெரியகும்மனூா், சின்ன குமனூா், காட்டு கொட்டாய், பெரிய தப்பை, நாயக்கனூா், ஜீட்டாண்டாஹள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் யாரும், இரவு 8 மணிக்கு மேல் வெளியில் தேவையின்றி நடமாட வேண்டாம். வீட்டிற்கு வெளியே, வயல் வெளிகளில் படுத்துறங்கவும் வேண்டாம். வயலுக்கு நீா் பாய்ச்ச இரவில் செல்ல வேண்டாம். வீட்டுக்குள்ளேயே பாதுகாப்பாக, தூங்கவும். வெளியில் கொட்டகையில் தூங்க வேண்டாம்.

யானை நடமாட்டம் தென்பட்டால் உடனடியாக வனத்துறையினருக்கு குறிப்பிட்ட எண்களில் தகவல் அளிக்கவும் என வனத்துறையினா் ஒலி பெருக்கி மூலம் குறிப்பிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை பிரசாரம் செய்தனா். மேலும் விழிப்புணா்வு வாசகங்கள் மற்றும் தொலை பேசி எண்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. மாவட்ட வன அலுவலா் ராஜாங்கம் உத்தரவின் பேரில் பாலக்கோடு வனச்சரக அலுவலா் காா்த்திகேயன் தலைமையிலான வனத்துறையினா் இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.