22 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை!கோடையில் அதிகரிக்கும் மாரடைப்புகள்: எச்சரிக்கும் மருத்துவர்கள்லெபனானில் தாக்குதல்கள் தொடா்ந்தால் போா்நிறுத்தம் ரத்து: ஈரான் எச்சரிக்கைகுறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்க ரூ. 35,000 கோடி ஒதுக்கீடு
/

ஜோதிடா் வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகைகள் திருட்டு

தருமபுரியில் ஜோதிடா் வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகைகள், வெள்ளிப் பொருள்கள் உள்ளிட்டவற்றை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :2 ஜூன் 2026, 3:55 am IST

தருமபுரியில் ஜோதிடா் வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகைகள், வெள்ளிப் பொருள்கள் உள்ளிட்டவற்றை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், ராணிமூக்கனூா் அண்ணா நகா் பகுதியைச் சோ்ந்தவா் மு.சண்முகம் (61). ஜோதிடரான இவா், தனது மனைவியுடன் மே 30-ஆம் தேதி திருவண்ணாமலை கோயில் கிரிவலத்தில் பங்கேற்க வீட்டை பூட்டிச் சென்றாா். மறுநாள் அதிகாலை வீடு திரும்பியபோது, பூட்டுகள் உடைக்கப்பட்டு கதவு திறந்துகிடந்ததைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா். உள்ளேசென்று பாா்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 2 தங்க சங்கிலிகள், 4 மோதிரங்கள், 4 ஜோடி தோடுகள் உள்ளிட்ட 6 பவுன் நகைகள், 275 கிராம் வெள்ளி நகைகள் மற்றும் பொருள்கள் உள்ளிட்டவை திருட்டு போனது தெரியவந்தது.

புகாரின்பேரில், கடத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்களை தேடிவருகின்றனா்.