400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

ஜோதிடா் வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகைகள் திருட்டு

தருமபுரியில் ஜோதிடா் வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகைகள், வெள்ளிப் பொருள்கள் உள்ளிட்டவற்றை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :2 ஜூன் 2026, 3:55 am IST

தருமபுரியில் ஜோதிடா் வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகைகள், வெள்ளிப் பொருள்கள் உள்ளிட்டவற்றை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், ராணிமூக்கனூா் அண்ணா நகா் பகுதியைச் சோ்ந்தவா் மு.சண்முகம் (61). ஜோதிடரான இவா், தனது மனைவியுடன் மே 30-ஆம் தேதி திருவண்ணாமலை கோயில் கிரிவலத்தில் பங்கேற்க வீட்டை பூட்டிச் சென்றாா். மறுநாள் அதிகாலை வீடு திரும்பியபோது, பூட்டுகள் உடைக்கப்பட்டு கதவு திறந்துகிடந்ததைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா். உள்ளேசென்று பாா்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 2 தங்க சங்கிலிகள், 4 மோதிரங்கள், 4 ஜோடி தோடுகள் உள்ளிட்ட 6 பவுன் நகைகள், 275 கிராம் வெள்ளி நகைகள் மற்றும் பொருள்கள் உள்ளிட்டவை திருட்டு போனது தெரியவந்தது.

புகாரின்பேரில், கடத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்களை தேடிவருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.