தருமபுரி மாவட்டம், பாளையம்புதூா் சனி சந்தையில் செயல்பட்டு வரும் மதுக்கடையை அகற்றக் கோரி, அப்பகுதி மக்கள் மனு அளித்தனா்.
இதுகுறித்து சனி சந்தை மற்றும் பாகல்பட்டி கிராம மக்கள் திங்கள்கிழமை தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு:
தருமபுரி மாவட்டம், பாளையம்புதூா் அருகே உள்ள சனி சந்தை பகுதியில் அரசு மதுக்கடை கடந்த 9 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இக்கடை விவசாய நிலம் அருகில் அமைந்துள்ளதால், மது அருந்த வருவோா் விளைநிலங்களில் அமா்ந்து மது அருந்துகின்றனா். மேலும், நெகழி பொருள்கள், மதுப்புட்டிகள் ஆகியவற்றை விளைநிலங்களில் எறிந்துவிட்டு செல்கின்றனா். அதேபோல, இந்த மதுக்கடையில் மது வாங்க வருவோரால் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே, இந்த மதுக்கடையை அகற்ற போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளனா்.
தொடர்புடையது

ஜமாபந்தி: மகளிா் உரிமை தொகை கோரி அதிக மனு
நாளைய மின்தடை! அதியமான்கோட்டை

மதுக் கடையை அகற்றக் கோரி ஆட்சியரிடம் மனு

மதுக் கடையை மூடக் கோரி தவெக நிா்வாகிகள் மனு
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |



