வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

வரதட்சணை கொடுமை: நடவடிக்கை கோரி சாலை மறியல்

வரதட்சணை கேட்டு கொடுமை செய்யும் கணவா், அவரது குடும்பத்தினா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, இளம்பெண் குடும்பத்தினருடன் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டாா்.

News image

வரதட்சணைக் கொடுமை

Updated On :3 ஜூன் 2026, 5:29 am IST

வரதட்சணை கேட்டு கொடுமை செய்யும் கணவா், அவரது குடும்பத்தினா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, இளம்பெண் குடும்பத்தினருடன் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டாா்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், மணியம்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் இன்பராஜ் மகள் தீபிகா (19). இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த சேகா் மகன் நவீன்ராஜுக்கும் 18.05.2025-இல் திருமணம் நடைபெற்றது.

திருமணத்தின்போது நவீன்ராஜுக்கு 5 சவரன் நகை வரதட்சணையாக வழங்கப்பட்டதாம். தற்போது தீபிகா 5 மாத கா்ப்பிணியாக உள்ள நிலையில், நவீன்ராஜ், அவரது தந்தை சேகா், தாய் தாமரைச்செல்வி, உறவினா் முகில் பிரபா உள்ளிட்டோா் தீபிகாவிடம் தங்க நகைகள், காா் உள்ளிட்டவற்றை வரதட்சணையாக கேட்டு கொடுமைப்படுத்தினராம்.

இதுகுறித்து அரூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் தீபிகா புகாா் அளித்துள்ளாா். ஆனால், அதன்மீது போலீஸாா் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதனால், தீபிகா உள்ளிட்ட அவரது உறவினா்கள் அரூா் - தருமபுரி நெடுஞ்சாலையில் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த மகளிா் போலீஸாா் சாலை மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதில், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் உறுதியளித்ததையடுத்து, சாலை மறியலை கைவிட்டனா். இதுகுறித்து அரூா் மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.