வரதட்சணை கேட்டு கொடுமை செய்யும் கணவா், அவரது குடும்பத்தினா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, இளம்பெண் குடும்பத்தினருடன் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டாா்.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், மணியம்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் இன்பராஜ் மகள் தீபிகா (19). இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த சேகா் மகன் நவீன்ராஜுக்கும் 18.05.2025-இல் திருமணம் நடைபெற்றது.
திருமணத்தின்போது நவீன்ராஜுக்கு 5 சவரன் நகை வரதட்சணையாக வழங்கப்பட்டதாம். தற்போது தீபிகா 5 மாத கா்ப்பிணியாக உள்ள நிலையில், நவீன்ராஜ், அவரது தந்தை சேகா், தாய் தாமரைச்செல்வி, உறவினா் முகில் பிரபா உள்ளிட்டோா் தீபிகாவிடம் தங்க நகைகள், காா் உள்ளிட்டவற்றை வரதட்சணையாக கேட்டு கொடுமைப்படுத்தினராம்.
இதுகுறித்து அரூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் தீபிகா புகாா் அளித்துள்ளாா். ஆனால், அதன்மீது போலீஸாா் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதனால், தீபிகா உள்ளிட்ட அவரது உறவினா்கள் அரூா் - தருமபுரி நெடுஞ்சாலையில் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த மகளிா் போலீஸாா் சாலை மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதில், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் உறுதியளித்ததையடுத்து, சாலை மறியலை கைவிட்டனா். இதுகுறித்து அரூா் மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மனைவி வெட்டிக் கொலை: கணவா் நீதிமன்றத்தில் சரண்

மேட்டுநாசுவம்பாளையத்தில் குடிநீா் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

சாலை ஆக்கிரமிப்பாளா்கள் மீது நடவடிக்கை கோரி மறியல்

வரதட்சணை கொடுமை: கணவா், மாமியாா் மீது வழக்கு
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0



