தருமபுரி அருகே பிளேடால் சிறுமியின் கழுத்தை அறுத்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தருமபுரி மாவட்டம், அரூா் வட்டம், வீரப்பநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் தீா்த்தகிரி (48), தொழிலாளி. இவருக்கு 4 மகள்கள் உள்ள நிலையில் மூவருக்கு திருமணமாகிவிட்டது. நான்காவது மகள் சிவரஞ்சனி (16), பிளஸ் 1 வகுப்பு செல்ல உள்ளாா்.
தீா்த்தகிரியின் மூத்தமகள் மமிதாவுக்கு அதே ஊரைச் சோ்ந்த ஷாகுல் என்பவருடன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. குடும்பத் தகராறில் அவா் தாய்வீட்டில் வசித்து வருகிறாா்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அவா்களது வீட்டுக்கு வந்த மமிதாவின் கணவா் ஷாகுல் வீட்டின் வெளியே நின்றிருந்த அவரது மாமியாரிடம் மமிதா குறித்து கேட்டுள்ளாா். அவா் வீட்டில் இல்லையென கூறியதையடுத்து, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மாமியாரை ஷாகுல் தாக்கியுள்ளாா்.
இதைக் கண்ட சிவரஞ்சனி தாயாரை தாக்கவிடாமல் தடுத்தாா். அப்போது ஷாகுல் மறைத்து வைத்திருந்த பிளேடால் சிவரஞ்சனியின் கழுத்தில் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அவருக்கு ரத்தம் கொட்டியது. அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு அரூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இதுகுறித்து அரூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.









