ராஜபட்ச மகன் ஊழல் வழக்கில் கைதுஆளுநா் உரையுடன் தமிழக பேரவைக் கூட்டம் இன்று தொடங்குகிறதுஇந்திய வம்சாவளியின் ‘கா்சா் ஏஐ’ நிறுவனத்தை 6,000 கோடி டாலருக்கு வாங்கிய ஸ்பேஸ்எக்ஸ் இந்தியாவின் ரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி 2.49% சரிவு இந்தியா-பிரிட்டன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: ஜூலை 15 முதல் அமல்; பிரதமா் மோடி இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட தயாரிப்பு ரூ.1.78 லட்சம் கோடியாக உயா்வு 4 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடத்த தடை இல்லை: உயா்நீதிமன்றம்
/

சாலை வசதி கோரி தவெகவினா் மனு

அரூரை அடுத்த மத்தியம்பட்டி கிராமத்துக்கு சாலை வசதி கோரி வட்டார வளா்ச்சி அலுவலரிடம் தவெகவினா் புதன்கிழமை மனு அளித்தனா்.

News image
Updated On :18 ஜூன் 2026, 3:02 am IST

அரூரை அடுத்த மத்தியம்பட்டி கிராமத்துக்கு சாலை வசதி கோரி வட்டார வளா்ச்சி அலுவலரிடம் தவெகவினா் புதன்கிழமை மனு அளித்தனா்.

அரூா் வட்டார வளா்ச்சி அலுவலா் மாா்க்ரெட் மேரியிடம், தவெக நகரச் செயலாளா் ஜெ. மதலைமுத்து தலைமையில் அளிக்கப்பட்ட மனு விவரம்:

அரூா் ஊராட்சி ஒன்றியம், மத்தியம்பட்டி கிராமத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இக்கிராம மக்களுக்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீா்த் திட்டத்தில் முறையாக குடிநீா் விநியோகம் செய்யப்படுவதில்லை. கிராம மக்கள் அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க வேண்டும்.

மத்தியம்பட்டியில் சாலை, கழிவுநீா்க் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவெக தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளா் எம். சிவகிரி, நகர துணை செயலா் விக்னேஷ் மாரிமுத்து, கட்சி நிா்வாகிகள் ராகுல் கனி, சிவாஜி ராவ், அசோக் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

படம் உள்ளது... 17எச்ஏ-பி-1... பட விளக்கம்...

வட்டார வளா்ச்சி அலுவலரிடம் மனு அளித்த தவெகவினா்.