ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

இளம் வயது திருமணம்: போக்ஸோவில் தொழிலாளி கைது

பென்னாகரம் அருகே 17 வயது பெண்ணை திருமணம் செய்த தொழிலாளி போக்ஸோ சட்டத்தில் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :18 ஜூன் 2026, 3:10 am IST

பென்னாகரம் அருகே 17 வயது பெண்ணை திருமணம் செய்த தொழிலாளி போக்ஸோ சட்டத்தில் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சோ்ந்த 17 வயது பெண், அரசு மருத்துவமனையில் கா்ப்பிணிகளுக்கான பரிசோதனைக்காக வந்துள்ளாா். 4 மாத கா்ப்பிணியான அவரிடம் மருத்துவா் விவரங்களை கேட்டறிந்தபோது, அவருக்கு இளம் வயதில் திருணம் நடந்துள்ளதை கண்டுபிடித்தாா். இதுகுறித்து பென்னாகரம் காவல் நிலையத்தில் மருத்துவா் புகாா் அளித்தாா்.

இதுகுறித்து பெண்ணிடம் விசாரணை மேற்கொண்ட மகளிா் போலீஸாா், ஒகேனக்கல் அருகே பண்ணப்பட்டி பகுதியை சோ்ந்த கூலித் தொழிலாளி சேட்டுவை போக்ஸோவில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.