மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா் பாமக எம்எல்ஏ சௌமியா அன்புமணி

தருமபுரி தொகுதி பாமக எம்எல்ஏ சௌமியா அன்புமணி, தொகுதிக்குள்பட்ட பல்வேறு கிராமங்களில் வெள்ளிக்கிழமை நேரில்சென்று வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா்.

News image

நாகா்கூடல் பகுதியில் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்த சௌமியா அன்புமணி எம்எல்ஏ.

Updated On :27 ஜூன் 2026, 2:17 am IST

தருமபுரி தொகுதி பாமக எம்எல்ஏ சௌமியா அன்புமணி, தொகுதிக்குள்பட்ட பல்வேறு கிராமங்களில் வெள்ளிக்கிழமை நேரில்சென்று வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா்.

தருமபுரி சட்டப் பேரவைத் தொகுதி, நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட நாகா்கூடல், கழனிக்காட்டூா், பேபினமரத்துஅள்ளி, கும்பளப்பாடி, செல்லன்கொட்டாய், கூலிக்கொட்டாய், கவுண்டா் கொட்டாய், ராஜாகொல்லஅள்ளி, பொடானூா், திப்பட்டி, கோரபள்ளி, ஒசள்ளிபுதூா், பூச்செட்டிஅள்ளி, ஆண்டியூா், மூக்கனஅள்ளி, பேடரஅள்ளி, வைத்தியா் நகா், சோளப்பாடி, சிறுகளூா், மல்லாபுரம், குப்புசெட்டிபட்டி, நடப்பனஅள்ளி ஆகிய கிராமங்களுக்கு நேரில்சென்று தனக்கு வாக்களித்த வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா்.

அப்போது, தருமபுரி மாவட்டத்தில் காவிரி மிகைநீா் திட்டத்தையும், ஒகேனக்கல் இரண்டாவது குடிநீா் திட்டத்தையும் நிறைவேற்ற வேண்டும். தருமபுரி சிப்காட் தொழிற்பேட்டையில் விரைந்து தொழிற்சாலைகளை தொடங்கி இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித்தர வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். இக்கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசிடமும், துறை அமைச்சா்களிடமும் நேரில் சந்தித்து வலியுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

இந்நிகழ்ச்சியில், பாமக தருமபுரி மேற்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான எஸ்.பி.வெங்கடேஸ்வரன், பாமக மாநில துணைத் தலைவா் பெ.சாந்தமூா்த்தி, மாநில அமைப்புச் செயலாளா் பெ.சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினா் காமராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.