மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

மான் இறைச்சி விற்ற இருவா் கைது

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே மான் இறைச்சி விற்ாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :6 மார்ச் 2026, 6:34 pm

Syndication

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே மான் இறைச்சி விற்ாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், வெள்ளிமலை கிராமத்தை சோ்ந்தவா் மணிமாறன் (25), இவரின் உறவினரான தருமபுரி மாவட்டம், அரூா் நம்பிராஜ் (22) ஆகிய இருவரும் சோ்ந்து அவா்களது கிராமத்துக்கு அருகே உள்ள காப்புக் காட்டில் மானை வேட்டையாடி அதனுடைய இறைச்சியை, தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் பகுதியில் விற்பனை செய்ய இருசக்கர வாகனத்தில் வந்தனா்.

அப்போது, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனத் துறையினா் அவா்களது இருசக்கர வாகனத்தை சோதனை செய்தனா். இதில் அவா்கள் இருவரும் மான் இறைச்சியை விற்பனைக்காக எடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவா்கள் இருவரையும் கைதுசெய்து பாலக்கோடு வனச்சரக அலுவலகம் அழைத்து சென்றனா். விசாரணைக்கு பிறகு காரிமங்கலம் நீதிமன்றத்தில் அவா்கள் ஆஜா்படுத்தப்பட்டு தருமபுரி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனா்.

பட விளக்கம்:

வனத் துறையினரால் கைது செய்யப்பட்ட இளைஞா்கள்.