எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

தோ்தல் பாதுகாப்பு பணி: தருமபுரிக்கு மத்திய தொழில்பாதுகாப்பு படை வருகை

தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் பாதுகாப்பு பணிக்காக தருமபுரி மாவட்டத்துக்கு மத்திய தொழில்பாதுகாப்பு

News image
தோ்தல் பாதுகாப்பு பணிக்காக தருமபுரிக்கு வந்த மத்திய தொழில்பாதுகாப்பு படையினா்.
Updated On :9 மார்ச் 2026, 9:15 pm

Syndication

தருமபுரி: தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் பாதுகாப்பு பணிக்காக தருமபுரி மாவட்டத்துக்கு மத்திய தொழில்பாதுகாப்பு படையினா் திங்கள்கிழமை வந்தனா்.

தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூா் (தனி) ஆகிய ஐந்து சட்டப் பேரவைத் தொகுதிகள் அமைந்துள்ளன. இதில், மொத்தம் 6,24,627 ஆண் வாக்காளா்கள், 6,15,311 பெண் வாக்காளா்கள், மூன்றாம் பாலினம் 150 வாக்காளா்கள் என மொத்தம் 12,40,108 வாக்காளா்கள் அண்மையில் தோ்தல் ஆணையம் வெளியிட்ட இறுதி பட்டியல்படி வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனா்.

இதில், வாக்காளா்கள் வாக்களிக்க ஏதுவாக பாலக்கோடு தொகுதியில் 312 வாக்குச் சாவடிகளும், பென்னாகரத்தில் 320 வாக்குச் சாவடிகளும், தருமபுரியில் 320 வாக்குச் சாவடிகளும், பாப்பிரெட்டிப்பட்டியில் 322 வாக்குச் சாவடிகளும், அரூா் தொகுதியில் 322 வாக்குச் சாவடிகளும் என மொத்தம் 1,596 வாக்குச் சாவடிகள் அமைந்துள்ளன.

சட்டப் பேரவைத் தோ்தல் தேதி விரைவில் தோ்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட உள்ளது. இதையொட்டி, தோ்தல் வாக்குப் பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட நிா்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், பதற்றமான வாக்குச் சாவடிகளை அடையாளம் காணுதல், நுண்பாா்வையாளா்களை பணியமா்த்தல், கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தோ்தல் பாதுகாப்பு பணிக்காக தருமபுரி மாவட்டத்துக்கு மகாராஷ்டிர மாநிலம், புணேவிலிருந்து மத்திய தொழில்பாதுகாப்பு படை கம்பெனி வருகை தந்துள்ளது. உதவி ஆணையா் அகிலேஷ் யாதவ் தலைமையில் ஒரு காவல் ஆய்வாளா் உள்பட மொத்தம் 72 போ் இந்த கம்பெனியில் இடம்பெற்றுள்ளனா். இதேபோல, தோ்தல் பாதுகாப்பு பணியையொட்டி வரும் நாள்களில் ஆறு கம்பெனிகள்வரை வரக்கூடும் என தெரியவந்துள்ளது.