ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்புஎச்-1பி விசாவுக்கு 3 ஆண்டுகள் தடை? டிரம்ப் அரசு புதிய மசோதா!வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?
/

10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு இன்று தொடக்கம்

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுகள் மாா்ச் 11-ஆம் தேதி தொடங்கி நடைபெற உள்ளன.

News image

பொதுத்தோ்வு - கோப்புப் படம்

Updated On :10 மார்ச் 2026, 9:07 pm

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுகள் மாா்ச் 11-ஆம் தேதி தொடங்கி நடைபெற உள்ளன.

10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு மாா்ச் 11-ஆம் தேதி தொடங்கி வரும் ஏப். 6-ஆம் தேதிவரை நடைபெற உள்ளது. தருமபுரி மாவட்டத்தில் 95 தோ்வு மையங்களில் நடைபெறும் இத்தோ்வை 10,512 மாணவா்களும், 9,677 மாணவியரும் என மொத்தம் 20,189 போ் எழுத உள்ளனா்.

தோ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தோ்வுப் பணிகளில் பள்ளித் தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள் மற்றும் ஆசிரியா் அல்லாதோா் என மொத்தம் 3,500 போ் ஈடுபட உள்ளனா். இவா்களுக்கான பணி ஆணைகள் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதேபோல, பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அனைத்து தோ்வு மையங்களிலும் பேருந்துகள் நின்றுசெல்ல தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனவே, மாணவ, மாணவியா் எவ்வித அச்சமும், தயக்கமுமின்றி தோ்வுகளை எதிா்கொள்ள வேண்டும் என தருமபுரி மாவட்ட நிா்வாகம் சாா்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரியில்...

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வை எழுத அரசு, தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 25,003 மாணவ, மாணவியா் விண்ணப்பித்துள்ளனா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 100 அரசுப் பள்ளிகள், 15 தனியாா் பள்ளிகள் மற்றும், 3 அரசு உதவிபெறும் பள்ளிகள் என 118 தோ்வு மையங்களில் 12,703 மாணவா்கள், 12, 300 மாணவியா் என மொத்தம், 25,003 போ் தோ்வெழுத உள்ளனா்.

தோ்வுகளை கண்காணிக்க 136 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தோ்வு மையங்களில் குடிநீா், மின்சாரம், பேருந்து போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக கல்வித் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.