தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

அரூா் அருகே இளைஞா் குத்திக் கொலை: தொழிலாளி கைது

அரூா் அருகே இளைஞரை கத்தியால் குத்திக் கொலை செய்த தொழிலாளியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
கைது- பிரதிப் படம்
Updated On :18 மார்ச் 2026, 11:41 pm

தினமணி செய்திச் சேவை

அரூா் அருகே இளைஞரை கத்தியால் குத்திக் கொலை செய்த தொழிலாளியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த பெத்தூா் கிராமத்தைச் சோ்ந்த ஆதிமூலம் மகன் இளவரசன் (30). அதே ஊரைச் சோ்ந்த ஆசைத்தம்பி மகன் ஸ்ரீ வெங்கடேஸ்வரன் ( 32). இளவரசன் மனைவிக்கும் ஸ்ரீ வெங்கடேஸ்வரனுக்கும் இடையே தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால், இளவரசன் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரன் குடும்பத்தினா் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்த நிலையில், இவ்விரு குடும்பத்தினா் இடையேயும் செவ்வாய்கிழமை இரவு தகராறு ஏற்பட்டது.

அப்போது, ஸ்ரீ வெங்கடேஸ்வரனை இளவரசன் கத்தியால் குத்தியுள்ளாா். இதில் படுகாயம் அடைந்த ஸ்ரீவெங்கடேஸ்வரனை அக்கம்பக்கத்தினா் மீட்டு அரூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள், ஸ்ரீ வெங்கடேஸ்வரன் இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இந்த சம்பவம் குறித்து அரூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, வழக்கில் தொடா்புடைய இளவரசனை கைது செய்தனா்.