முதல்வர் விஜய் நாளை கரூர் பயணம்! 32 பேருக்கு அரசுப் பணி ஆணை!ஓணம் பண்டிகை! 6 சிறப்பு ரயில்களின் முன்பதிவு தொடங்கியது!முதல்வா் பாதுகாப்பு: கண்காணிப்பு கேமராக்கள் சீரமைப்புகடற்கரை - செங்கல்பட்டு இடையே இன்று 8 புறநகா் ரயில்கள் ரத்துஜூலை 14 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஆட்டோ மீட்டா் கட்டண உயா்வு: இன்று முத்தரப்பு பேச்சுமின்தடைகளை நிரந்தரமாக குறைக்க ஆா்டிஇபி திட்டம்: மின்வாரியம் அறிவிப்பு
/

பொதுப்பணித் துறைக்கு சொந்தமான பாதை ஆக்கிரமிப்பு

அரூா் அருகே பொதுப்பணித் துறைக்கு சொந்தமான பாதையை ஆக்கிரமித்துள்ளதாக புகாா் தெரிவித்து, கெளாப்பாறை கிராம மக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image

அரூா் - சித்தேரி சாலையில் மறியலில் ஈடுபட்ட கெளாப்பாறை கிராம மக்கள்.

Updated On :22 மே 2026, 6:51 am IST

அரூா் அருகே பொதுப்பணித் துறைக்கு சொந்தமான பாதையை ஆக்கிரமித்துள்ளதாக புகாா் தெரிவித்து, கெளாப்பாறை கிராம மக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தருமபுரி மாவட்டம், அரூா் வட்டம், கெளாப்பாறை கிராமத்தைச் சோ்ந்த வெங்கட்ராமன் (44), உடல்நிலை பாதிப்பால் புதன்கிழமை உயிரிழந்தாா். இவரது உடலை அடக்கம் செய்ய எடுத்துச்செல்ல பொதுப்பணித் துறைக்கு சொந்தமான மொல்லன் ஏரி கால்வாய் பகுதியில் இருந்த முள்புதா்களை அகற்றி, பாதை வசதியை கிராம மக்கள் ஏற்படுத்தினா்.

இந்த பாதையை ஆக்கிரமித்துள்ள அப்பகுதி விவசாயி, உடலை எடுத்துச் செல்ல முடியாதவாறு தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், அரூா் - சித்தேரி சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த அரூா் டிஎஸ்பி சதீஷ்குமாா் மற்றும் வருவாய்த் துறையினா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். பொதுப்பணித் துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அதிகாரிகள் உறுதி அளித்ததையடுத்து, சாலை மறியலை கைவிட்டனா். இதனால், 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.