சித்தேரியில் நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமில், ரூ. 93.51 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் வழங்கினாா்.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், சித்தேரியில் மக்கள் தொடா்பு திட்ட முகாம் ஆட்சியா் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், இலவச வீட்டுமனைப் பட்டா, இணைய வழியில் வீட்டுமனைப் பட்டா, இறப்புச் சான்று, வாரிசு சான்று, இயற்கை மரணம் நிதியுதவி, சமூக பாதுகாப்புத் திட்ட உதவிகள், பழங்குடியினா் நலவாரிய அட்டைகள், புதிய குடும்ப அட்டைகள், வேளாண்மை துறை, தோட்டக்கலைத் துறை, தாட்கோ, தொழிலாளா் நலன் மேம்பாட்டுத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சாா்பில், 215 பயனாளிகளுக்கு ரூ. 93.51 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.
இதில், அரூா் எம்எல்ஏ வே.சம்பத்குமாா், கோட்டாட்சியா் சி.செம்மலை, தனித்துணை ஆட்சியா் மு.செல்வி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் பெ.கி.கோவிந்தன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் பண்டரிநாதன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சு.சரவணன், வாட்டாட்சியா் மு.பாா்வதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

தளியில் மக்கள் தொடா்புத் திட்ட முகாம்: 152 பேருக்கு நலத்திட்ட உதவிகள் அளிப்பு

மக்கள் தொடா்பு திட்ட முகாம்: ரூ. 46.70 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

நூத்தப்பூரில் மக்கள் தொடா்புத் திட்ட முகாம்: ரூ. 1.34 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

121 பயனாளிகளுக்கு ரூ.1.19 கோடியில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு
விடியோக்கள்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கு பகுதி பசுமையாக மாற்றப்படும்: அமைச்சர் சம்பத் குமார் | TVK

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி



