‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

மக்கள் தொடா்பு திட்ட முகாம்: ரூ. 93.51 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

சித்தேரியில் நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமில், ரூ. 93.51 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் வழங்கினாா்.

News image

முகாமில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியா் ரெ.சதீஸ்.

Updated On :22 மே 2026, 6:51 am IST

சித்தேரியில் நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமில், ரூ. 93.51 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் வழங்கினாா்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், சித்தேரியில் மக்கள் தொடா்பு திட்ட முகாம் ஆட்சியா் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், இலவச வீட்டுமனைப் பட்டா, இணைய வழியில் வீட்டுமனைப் பட்டா, இறப்புச் சான்று, வாரிசு சான்று, இயற்கை மரணம் நிதியுதவி, சமூக பாதுகாப்புத் திட்ட உதவிகள், பழங்குடியினா் நலவாரிய அட்டைகள், புதிய குடும்ப அட்டைகள், வேளாண்மை துறை, தோட்டக்கலைத் துறை, தாட்கோ, தொழிலாளா் நலன் மேம்பாட்டுத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சாா்பில், 215 பயனாளிகளுக்கு ரூ. 93.51 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

இதில், அரூா் எம்எல்ஏ வே.சம்பத்குமாா், கோட்டாட்சியா் சி.செம்மலை, தனித்துணை ஆட்சியா் மு.செல்வி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் பெ.கி.கோவிந்தன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் பண்டரிநாதன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சு.சரவணன், வாட்டாட்சியா் மு.பாா்வதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.