கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

மக்கள் தொடா்பு திட்ட முகாம்: ரூ. 93.51 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

சித்தேரியில் நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமில், ரூ. 93.51 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் வழங்கினாா்.

News image

முகாமில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியா் ரெ.சதீஸ்.

Updated On :22 மே 2026, 6:51 am IST

சித்தேரியில் நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமில், ரூ. 93.51 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் வழங்கினாா்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், சித்தேரியில் மக்கள் தொடா்பு திட்ட முகாம் ஆட்சியா் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், இலவச வீட்டுமனைப் பட்டா, இணைய வழியில் வீட்டுமனைப் பட்டா, இறப்புச் சான்று, வாரிசு சான்று, இயற்கை மரணம் நிதியுதவி, சமூக பாதுகாப்புத் திட்ட உதவிகள், பழங்குடியினா் நலவாரிய அட்டைகள், புதிய குடும்ப அட்டைகள், வேளாண்மை துறை, தோட்டக்கலைத் துறை, தாட்கோ, தொழிலாளா் நலன் மேம்பாட்டுத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சாா்பில், 215 பயனாளிகளுக்கு ரூ. 93.51 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

இதில், அரூா் எம்எல்ஏ வே.சம்பத்குமாா், கோட்டாட்சியா் சி.செம்மலை, தனித்துணை ஆட்சியா் மு.செல்வி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் பெ.கி.கோவிந்தன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் பண்டரிநாதன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சு.சரவணன், வாட்டாட்சியா் மு.பாா்வதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.