அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

சிறப்பு காவல் உதவி ஆய்வாளரைத் தாக்கிய காவல் ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்

போச்சம்பள்ளியை அடுத்த மத்தூர் காவல் நிலையத்தில் தாமதமாக வந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய காவல் ஆய்வாளர் ஆயுதப்படைப் பிரிவுக்கு அதிரடி மாற்றம் செய்யப்பட்டார்.

News image
Updated On :9 நவம்பர் 2017, 1:02 am

DIN

போச்சம்பள்ளியை அடுத்த மத்தூர் காவல் நிலையத்தில் தாமதமாக வந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய காவல் ஆய்வாளர் ஆயுதப்படைப் பிரிவுக்கு அதிரடி மாற்றம் செய்யப்பட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை அடுத்த மத்தூர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராகப்  பணிபுரிபவர் இரா. ஆண்டவர்.  அதே காவல் நிலையத்தில், சிறப்பு காவல் உதவி ஆய்வாளராகப் பணிபுரியும் பார்த்திபன்,  புதன்கிழமை காலை 9. 20 மணிக்கு வந்துள்ளார்.
அப்போது காவல் ஆய்வாளர் இரா. ஆண்டவர் 7.30 மணிக்கு வரவேண்டிய நீங்கள் இவ்வளவு நேரம்  தாமதமாகவா வருவது? எனக் கேட்டதாகவும், அதில் இருவருக்குமிடையே வாய்த் தகராறு ஏற்பட்டு ஆவேசத்தில் பார்த்திபனை காவல் ஆய்வாளர் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதை எதிர்பார்க்காத பார்த்திபனும் காவல் ஆய்வாளரைத் திருப்பித் தாக்கியுள்ளார். இதையடுத்து,  இருவரும் மத்தூர் அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றனர். தகவல் அறிந்ததும்  ஊத்தங்கரை காவல் துணைக் கண்காணிப்பாளர் அர்ச்சுனன் இருவரிடமும் விசாரணை நடத்தி,  மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து, கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஷ்குமார்,  காவல் ஆய்வாளர் இரா.ஆண்டவரை ஆயுதப்படைப் பிரிவுக்கு தாற்காலிகமாக மாற்றி உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.