மே 3-ல் நடைபெற்ற நீட் தேர்வு ரத்து! மே 3-ல் நடைபெற்ற இளநிலை நீட் தேர்வு ரத்து: தேசிய தேர்வு முகமைஅதிமுக எம்.எல்.ஏ.க்களை சந்திக்கிறார் முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்க்கு பாராட்டு; தவெக அரசுக்கு ஆதரவு! அமமுக எம்.எல்.ஏ. காமராஜ் தவெக ஆட்சியை ஆதரிக்க முடிவு: சி.வி. சண்முகம்தமிழகத்தில் 717 மதுக்கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவு!விவசாயிகளுக்கான ரூ. 317 கோடி நிலுவை: அதிகாரிகளுக்கு முதல்வா் உத்தரவு22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் விரைவில் எஸ்ஐஆர்!தமிழக அமைச்சரவையில் இடதுசாரிகளா? மார்க்சிஸ்ட் கம்யூ. விளக்கம்நீட் தேர்வில் முறைகேடுகள்: தேசிய தேர்வு முகமை விளக்கம்புதுச்சேரி முதல்வராக என். ரங்கசாமி நாளை பதவியேற்பு!
/

விவசாய நிலத்தை சேதப்படுத்திய யானைகள்

சூளகிரி அருகே ராமாபுரத்தில் விவசாய நிலங்களில் புகுந்த யானைகள், பீன்ஸ், தக்காளி தோட்டங்களை சேதப்படுத்தின. 

Updated On :18 ஏப்ரல் 2018, 7:50 am IST

சூளகிரி அருகே ராமாபுரத்தில் விவசாய நிலங்களில் புகுந்த யானைகள், பீன்ஸ், தக்காளி தோட்டங்களை சேதப்படுத்தின. 
ஒசூர் அருகே போடூர்பள்ளம் வனப்பகுதியில் குட்டியுடன் 6 யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக அந்த பகுதியில் முகாமிட்டு அட்டகாசம் செய்து வருகின்றன. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை போடூர் வனப்பகுதியில் இருந்து ராமாபுரம் பகுதிக்குச் சென்ற யானைகள், அங்கு பீன்ஸ்,  கத்திரி தோட்டங்களில் புகுந்து தின்றும், கால்களால் மிதித்தும் சேதப்படுத்தின. 
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள், வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் வனத்துறையினர் அங்கு சென்று அந்த யானைகளை போடூர்பள்ளம் காட்டுக்கு விரட்டினர். இந்த யானைகளை தேன்கனிக்கோட்டையில் உள்ள அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.