மீட்சிக்குப் பிறகு சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!!ஜூனில் சில்லறை விலை பணவீக்கம் 4.38 சதவீதமாக உயர்வு!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 27 காசுகள் சரிந்து ரூ. 95.65 ஆக நிறைவு!தில்லியில் ஞானபீட விருது பெற்றார் வைரமுத்து!முட்டை கொள்முதல் விலை ரூ. 6.70-ஆக நிர்ணயம்.லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஏ. அருண், சென்னை காவலர் பயிற்சி மைய இயக்குநராகப் பணியிட மாற்றம்பட்ஜெட்: ஜூலை 16 -ல் தமிழக அமைச்சரவை கூட்டம்!தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்!பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்!மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! முதல்வர் விஜய்யுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா சந்திப்பு! திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்குசென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
/

ஒகேனக்கல் மலையடிவார கிராமத்தில் தண்ணீர் புகுந்து வீடுகள் சேதம்

ஒகேனக்கல் காவிரிக் கரையோரக் குடியிருப்பு ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை பகலில் தண்ணீர் புகுந்ததை அடுத்து, மண் சுவர் கொண்ட

Updated On :20 ஆகஸ்ட் 2018, 8:27 am IST

ஒகேனக்கல் காவிரிக் கரையோரக் குடியிருப்பு ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை பகலில் தண்ணீர் புகுந்ததை அடுத்து, மண் சுவர் கொண்ட குடிசைகள் சேதமடைந்தன.  இதனால், அப்பகுதியைச் சேர்ந்த 10 குடும்பங்கள் பொருள்களுடன் அருகே மலைமேல் ஏறி தங்கியுள்ளனர். 
ஒகேனக்கல் பகுதியிலுள்ள காவிரியாற்றில் தொடர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், கரையோரப் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கோத்திக்கல் செல்லும் வழியில் சுமார் 2 கி.மீ தொலைவில் புளியமரத்துக்கொம்பு கொண்டலாம்கொட்டாய் என்ற காவிரிக் கரையோரக் குடியிருப்பில் ஞாயிற்றுக்கிழமை பகலில் தண்ணீர் புகுந்தது.
சுமார் 15க்கும் மேற்பட்ட மண் சுவர் கொண்ட குடிசைகள் இங்குள்ளன. கடந்த சில நாள்களாக இப்பகுதியில் தண்ணீர் வரவில்லை. ஆனால், ஞாயிற்றுக்கிழமை பகலில் திடீரென தண்ணீர் வரத்து அதிகரித்து குடிசைப் பகுதிக்குள் புகுந்துள்ளது.
இதனால், சுமார் 10-க்கும் மேற்பட்ட குடிசைகளின் மண்சுவர்கள் இடிந்து விழுந்தன. இதைத் தொடர்ந்து இங்கு வசிக்கும் மக்கள் தங்கள் பொருள்களை எடுத்துக் கொண்டு வெளியேறி, அருகிலுள்ள மலை மீது ஏறி தங்கியுள்ளனர்.
வருவாய்த் துறை அலுவலர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, அப்பகுதி மக்களைப்பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கவும், சேதங்களைக் கணக்கிட்டு உரிய நிவாரணம் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.