நீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது ஜனநாயகத்திற்கு எதிரானது! முதல்வர் விஜய்சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு! நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!
/

துத்துக்குடி மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அதிமுக அரசு செயல்படும்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவன விவகாரத்தில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், அதிமுக அரசு செயல்படும் என மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை தெரிவித்தார்.

Updated On :25 மே 2018, 2:44 am IST

தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவன விவகாரத்தில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், அதிமுக அரசு செயல்படும் என மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை தெரிவித்தார்.
தனது தாயாரின் நினைவு தினத்தையொட்டி அஞ்சலி செலுத்த வியாழக்கிழமை கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூருக்கு வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் இந்த ஸ்டெர்லைட் நிறுவனம் மூடப்பட்டது. ஆனால், அவர்கள் உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றதால்தான் இந்தப் பிரச்னை ஏற்பட்டு இருக்கிறது என தமிழக முதல்வர் தெளிவாகத் தெரிவித்துள்ளார்.
விவசாயிகள், பொதுமக்களுக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாமல் மக்கள் நலனுக்காக மட்டுமே இந்த அரசு செயல்படும். மக்கள் நலன் பாதிக்கும் எந்தத் திட்டத்தையும் அதிமுக அரசு செயல்படுத்தாது. தூத்துக்குடியில் அமைதியை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் அரசு அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூடு சம்பவம் அனைவரையும் வருத்தமடையச் செய்துள்ளது. தென்னிந்தியாவில் தேசியக் கட்சிகள் வெற்றி பெறாது. நீதிமன்ற உத்தரவுப்படி கர்நாடகம், காவிரி நீரை திறந்துவிடும் எனத் தெரிவித்தார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.