கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து சென்னை, திருத்தணியில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெய்யில்!தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து! - தமிழக அரசு தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 5 மாவட்டங்களில் கனமழை!கண்ணீரில் மக்கள்! இத்தாலியில் மிட்டாய் கொடுப்பதில் பிரதமர் பிஸி! ராகுல் விமர்சனம்வெற்றியால் கூத்தாடுவதுமில்லை; தோல்வியால் துவண்டு விடுவதுமில்லை! மு.க. ஸ்டாலின் அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடமில்லை என தவெக உறுதி! திருமாவளவன் பிரான்ஸ் ஜி7 மாநாட்டில் டிரம்ப் பங்கேற்பு! மோடிக்கும் அழைப்பு!
/

தைப்பூசம்: அலங்கரிக்கப்பட்ட  தேரில் முருகன் திருவீதி உலா

கிருஷ்ணகிரி  அருகே  உள்ள காட்டிநாயனப்பள்ளி முருகன் கோயிலில் தைப்பூச விழாவையொட்டி, அலங்கரிக்கப்பட்ட  தேரில் சுவாமி  திருவீதி உலா நடைபெற்றது.

Updated On :23 ஜனவரி 2019, 9:36 am IST

கிருஷ்ணகிரி  அருகே  உள்ள காட்டிநாயனப்பள்ளி முருகன் கோயிலில் தைப்பூச விழாவையொட்டி, அலங்கரிக்கப்பட்ட  தேரில் சுவாமி  திருவீதி உலா நடைபெற்றது.
கிருஷ்ணகிரியை  அடுத்த காட்டிநாயனப்பள்ளியில் உள்ள ஆஞ்சநேய சுப்பிரமணி சுவாமி கோயிலில் தைப்பூச விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. இதைத் தொடர்ந்து இரவில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில்,  சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. 
இந்த தேர்ப் பவனியானது சென்னை சாலை, வட்டச் சாலை, காந்தி சிலை சாலை வழியாக  பெருமாள் கோயிலை சென்றடைந்தது. பின்னர் காட்டிநாயனப்பள்ளி கோயிலை சென்றடைந்தது. அப்போது, சாலையின் இருபுறங்களிலும் திரண்டிருந்த பக்தர்கள் உப்பு, மிளகு, சில்லறை காசுகளை வீசி, தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். தேர் திருவீதி உலாவையொட்டி, ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.