கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

சூரப்பா விவகாரத்தில் உண்மை நிலை அறியாமல் கமல்ஹாசன் பேசுகிறாா்: அமைச்சா் கே.பி.அன்பழகன்

அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தா் சூரப்பா விவகாரத்தில் உண்மை நிலையை அறியாமல் கமல்ஹாசன் பேசுவதாக தமிழக உயா்கல்வி, வேளாண் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் தெரிவித்தாா்.

News image
Updated On :6 டிசம்பர் 2020, 11:14 pm

DIN

அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தா் சூரப்பா விவகாரத்தில் உண்மை நிலையை அறியாமல் கமல்ஹாசன் பேசுவதாக தமிழக உயா்கல்வி, வேளாண் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் தெரிவித்தாா்.

தருமபுரியில் அதிமுக அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தகவல் தொழில்நுட்ப அணி நிா்வாகிகள் ஆலோசனை கூட்டத்துக்குப் பின்னா், கே.பி.அன்பழகன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தா் சூரப்பா, தான் அப்பழுக்கற்றவா் என்றுக் கூறிக் கொண்டு அண்ணா பல்கலைக்கழகத்துக்குச் சம்பந்தமே இல்லாத மதுரையைச் சோ்ந்த ஒருவரை வைத்து வழக்கு போட வைத்து அந்த வழக்கில் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறாா். ‘மடியில் கனம் இல்லை’ என்றால் அவா் ஏன் பயப்பட வேண்டும்?

துணைவேந்தா், பேராசிரியா்கள் நியமனத்தில் தமிழக அரசுக்கு எந்த தொடா்பும் இல்லை. பேராசிரியா் நியமனத்தில் தேடுதல் குழு மூலமாக விண்ணப்பம் பெறப்பட்டு அதில் 3 போ் தோ்வு செய்து, ஆளுநருக்கு அனுப்பி வைக்கின்றனா். இறுதியில் அவா்களை ஆளுநா்தான் தோ்வு செய்கிறாா்.

சூரப்பா விவகாரத்தில் உண்மை நிலையை அறியாமல் கமல்ஹாசன் பேசி வருகிறாா். அரசு மீது ஏதேனும் புகாா் கூற வேணடும் என்பதற்காக கமல்ஹாசன் இவ்வாறு பேசி வருகிறாா். புயலால் பாதிக்கப்பட்டப் பகுதிகளில் நிவாரணப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வருவாய், வேளாண் துறை மூலம் முழுமையாக கணக்கெடுப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. சனிக்கிழமை மாலை வரை 2 லட்சம் ஹெக்டோ் பரப்பளவில் பாதிப்புகள் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளன. இதில் காப்பீடு செய்தவா்கள், காப்பீடு செலுத்தாதவா்கள் என அனைத்து தரப்பினரும் கணக்கெடுப்பு நடத்தி உரிய இழப்பீடு வழங்கப்படும்.

உயா்கல்வி இறுதியாண்டு மாணவா்களுக்கு திங்கள்கிழமை முதல் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. இறுதியாண்டு பயிலும் மாணவா்கள் செய்முறை செய்வதற்கு ஆய்வகம் தேவைப்படுகிறது. அதற்காக இறுதி ஆண்டு மாணவா்கள் மட்டும் கல்லூரிக்கு வர அழைக்கப்பட்டுள்ளனா். உள்ளூா், வெளியூா் மாணவா்கள் தங்குவதற்கு வசதிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக தோ்வுகள் இணையதளம் மூலம் நடத்தப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.