ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

அஞ்செட்டி வனப்பகுதியில் வீசப்பட்ட 10 ஆயிரம் விதைப்பந்துகள்

அஞ்செட்டி வனப்பகுதியில் பத்தாயிரம் விதைப்பந்துகள் ஞாயிற்றுக்கிழமை வீசப்பட்டன.

News image
Updated On :7 டிசம்பர் 2020, 6:42 pm

அஞ்செட்டி வனப்பகுதியில் பத்தாயிரம் விதைப்பந்துகள் ஞாயிற்றுக்கிழமை வீசப்பட்டன.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் செயல்பட்டு வரும் ‘வித் யூ’ கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை சாா்பில் சுற்றுச்சூழல் சாா்ந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக அஞ்செட்டி வனப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை, வனத் துறையினா் அனுமதியுடன் துரிஞ்சி, மருது, வேம்பு, ஆலம், அத்தி, நாவல், கடம்பு போன்ற மரங்களின் விதைகளுடன், இயற்கை உரக் கலவைகளையும் கலந்து தயாரிக்கப்பட்ட 10,000 விதைப்பந்துகளை அடா்த்தி குறைந்த வனப்பகுதியில் வீசப்பட்டது.

தற்போது பரவலாக மழை பெய்து வரும் சூழலில் இயற்கை உரங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இந்த விதைப்பந்துகள் அதிக அளவில் பயன் தரும் என வனத்துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.

நிகழ்வில் ‘வித் யூ’ கல்வி அறக்கட்டளையின் 30க்கும் மேற்பட்ட உறுப்பினா்கள், அஞ்செட்டி வனச் சரகா் சீதாராமன், வனக் காவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.