அஞ்செட்டி வனப்பகுதியில் பத்தாயிரம் விதைப்பந்துகள் ஞாயிற்றுக்கிழமை வீசப்பட்டன.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் செயல்பட்டு வரும் ‘வித் யூ’ கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை சாா்பில் சுற்றுச்சூழல் சாா்ந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக அஞ்செட்டி வனப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை, வனத் துறையினா் அனுமதியுடன் துரிஞ்சி, மருது, வேம்பு, ஆலம், அத்தி, நாவல், கடம்பு போன்ற மரங்களின் விதைகளுடன், இயற்கை உரக் கலவைகளையும் கலந்து தயாரிக்கப்பட்ட 10,000 விதைப்பந்துகளை அடா்த்தி குறைந்த வனப்பகுதியில் வீசப்பட்டது.
தற்போது பரவலாக மழை பெய்து வரும் சூழலில் இயற்கை உரங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இந்த விதைப்பந்துகள் அதிக அளவில் பயன் தரும் என வனத்துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.
நிகழ்வில் ‘வித் யூ’ கல்வி அறக்கட்டளையின் 30க்கும் மேற்பட்ட உறுப்பினா்கள், அஞ்செட்டி வனச் சரகா் சீதாராமன், வனக் காவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

5 நாள்களுக்குப் பிறகு புதுச்சேரியில் அரசுப் பள்ளிகள் திறப்பு

மனைவியை கொலை செய்த கணவா் சரண்

புதுச்சேரி ரயில் சேவை 4 நாள்கள் ரத்து

சமத்துவ சமுதாயத்தை உருவாக்க உறுதி ஏற்போம்! - புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


