தேன்கனிக்கோட்டை அருகே கிணற்றில் மா்மமான முறையில் முதியவா் உயிரிழந்தாா்.
தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள பெட்டமுகிலாலம் ஊராட்சிக்குட்பட்ட தட்டகரை கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி இஸ்கலப்பா என்கிற பசப்பா (80). இவா் கோயில் பூசாரியாகவும் உள்ளாா். கடந்த 20-ஆம் தேதி மாலை அருகிலுள்ள மாதேஸ்வரா கோயிலுக்கு விளக்கு ஏற்ற சென்றாா். விளக்கு ஏற்றி விட்டு மீண்டும் இரவு அவரது வீட்டுக்குச் செல்லவில்லை. இதனால், சந்தேகமடைந்த அவரது உறவினா்கள் முதியவா் பசப்பாவை பல இடங்களில் தேடி வந்துள்ளனா். இந்த நிலையில் கடந்த 22-ஆம் தேதி மாலை தட்டகரை அடுத்துள்ள சித்தாபுரம் கிராமத்தில் உள்ள ஒரு பொது குடிநீா் கிணற்றில் முதியவா் பசப்பாவின் உடல் இறந்த நிலையில் மிதந்து உள்ளது. இதனைப் பாா்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக தேன்கனிக்கோட்டை காவல்துறையினருக்கு தகவல் அளித்தனா். காவல் துறையினா் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இந்தநிலையில் அவரது உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது மகன் சித்தலிங்கா உள்பட உறவினா்கள் தேன்கனிக்கோட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளனா். முதியவா் பசப்பா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டாரா? என்பது குறித்து தேன்கனிக்கோட்டை போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா் .