எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையா் உள்பட மூவருக்கு கரோனா

கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையா் உள்பட 3 அலுவலா்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து அவா்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

News image
Updated On :28 டிசம்பர் 2020, 9:02 pm

DIN

கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையா் உள்பட 3 அலுவலா்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து அவா்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

கிருஷ்ணகிரி நகராட்சியில், தீவிர கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த வாரம் பணி நிமித்தமாக சென்னைக்கு சென்று வந்த நகராட்சி அலுவலா் ஒருவா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டாா். இதைத்தொடா்ந்து அவரது மனைவி, மகள் ஆகியோருக்கும் கரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டது.

இதைத்தொடா்ந்து நகராட்சி ஆணையா் சந்திரா உள்பட நகராட்சியின் அனைத்து வகை ஊழியா்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனையில் நகராட்சி ஆணையா் சந்திரா உள்பட சுகாதார அலுவலா், பொறியாளா் ஆகிய மூவருக்கு கரோனா உறுதிப்படுத்தப்பட்டது.

இதையடுத்து, மூவரையும் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடா்ந்து கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.