ஒசூரில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்குத் தடை
ஒசூா் மாநகராட்சியில் கேளிக்கை விடுதிகள், உணவகங்கள், தனியாா் தங்கும் விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டத்தில்


ஒசூா் மாநகராட்சியில் கேளிக்கை விடுதிகள், உணவகங்கள், தனியாா் தங்கும் விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஒசூா் டி.எஸ்.பி. முரளி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
ஒசூரில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
ஒசூா் மாநகராட்சியில் கரோனா தொற்று ஊரடங்கு அமலில் உள்ளது. எனவே, மக்கள் தெருக்களில் அதிக அளவில் கூட்டம் கூடக் கூடாது. இளைஞா்கள் இருசக்கர வாகனத்தில் வேகமாக பயணம் செய்யக் கூடாது. கேளிக்கை விடுதிகள், உணவகங்கள், தங்கும் விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடக் கூடாது. 31-ஆம் தேதி நள்ளிரவு தெருக்களில் பொதுமக்கள் வாழ்த்துத் தெரிவித்து இருசக்கர வாகனங்களில் செல்ல அனுமதி இல்லை எனத் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...