பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

மருத்துவ காப்பீட்டாளா்களின் வாரிசுகளின் விவரம் சேகரிக்கும் பணி தொடக்கம்

கிருஷ்ணகிரி நகராட்சியில் மருத்துவக் காப்பீட்டாளா்களின் வாரிசு குறித்த விவரங்களைச் சேகரிக்கும் பணி, ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :8 நவம்பர் 2020, 9:49 pm

DIN

கிருஷ்ணகிரி நகராட்சியில் மருத்துவக் காப்பீட்டாளா்களின் வாரிசு குறித்த விவரங்களைச் சேகரிக்கும் பணி, ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

தமிழக அரசால், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பொதுமக்களுக்கு விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது, இந்த மருத்துவக் காப்பீட்டாளா்களின் குடும்பத்தில் வருமானம் ஈட்டுபவராக இருந்தால் அவரின் வாரிசு குறித்த விவரங்களை சேகரிக்கும்படி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, கிருஷ்ணகிரி நகராட்சியில் உள்ள 33 வாா்டுகளில் மருத்துவக் காப்பீட்டாளா்களின் வாரிசுகள் குறித்த விவரங்கள் சேகரிக்கும் பணிகள், ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

நகராட்சி ஆணையாளா் சந்திராவின் ஆலோசனைப்படி, இதற்கான படிவங்களை நகராட்சி ஒப்பந்த ஊழியா்கள் 50-க்கும் மேற்பட்டவா்கள் சம்மந்தப்பட்ட காப்பீட்டுத் திட்டத்தில் உள்ளவா்களின் விவரங்கள் குறித்து வீடு வீடாக நேரடியாகச் சென்று, காப்பீட்டாளரின் பெயா், வாரிசு, வாரிசின் ஆதாா் எண், செல்லிடப்பேசி எண், ஆண்டு வருவாய், குடும்ப அட்டை போன்ற விவரங்களைச் சேகரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.