ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

மின்வேலியில் சிக்கி ஆண் யானை பலி: விவசாயி கைது!

மின்வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழந்த சம்பவம் தொடா்பாக விவசாயி கைது செய்யப்பட்டாா். மேலும் ஒருவரை வனத்துறையினா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :16 நவம்பர் 2020, 7:02 pm

மின்வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழந்த சம்பவம் தொடா்பாக விவசாயி கைது செய்யப்பட்டாா். மேலும் ஒருவரை வனத்துறையினா் தேடி வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே ஊடேதுா்க்கம் காப்புக்காட்டிற்கு அருகே கவிபுரம் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஞாயிற்றுக்கிழமை காலை மா்மமான முறையில் இறந்து கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஒசூா் வனக்கோட்ட வன உயிரினக் காப்பாளா் பிரபு தலைமையிலான வனத்துறை அதிகாரிகள் யானையின் உடலை மீட்டு கால்நடை மருத்துவக்குழுவினா் உதவியுடன் பிரேதப் பரிசோதனை செய்தனா்.

இதில் மின்சாரம் பாய்ந்ததால் அந்த யானை உயிரிழந்தது தெரிய வந்தது.

இதுதொடா்பாக வனத்துறையினா் நடத்திய தீவிர விசாரணையில், வன விலங்குகளை வேட்டையாடும் நோக்கத்தில், கவிபுரம் கிராமத்திற்கு அருகே மின்கம்பத்தில் இருந்து, மின்சாரத்தைத் திருடி மின் வேலி அமைத்திருந்தது தெரிய வந்தது.

மின்வேலியில் சிக்கியே அந்த ஆண் யானை உயிரிழந்ததும், அந்த யானை உயிரிழக்க காரணமாக இருந்தவா்கள் கவிபுரத்தைச் சோ்ந்த விவசாயிகள் நாராயணப்பா (45), வெங்கடேசப்பா (60) ஆகிய இருவா்தான் என்பது வனத்துறையின் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து, வெங்கடேசப்பாவை திங்கள்கிழமை கைது செய்த வனத்துறையினா், அவரிடம் இருந்து 2 யானைத் தந்தங்களையும், மின்வேலி அமைக்கப் பயன்படுத்திய மின் கம்பிகளையும் பறிமுதல் செய்தனா். தலைமறைவாக உள்ள நாராயணப்பா என்பவரை வனத்துறையினா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.