கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

பாலக்கோடு அருகே சாலை விபத்து: இருவா் பலி

பாலக்கோடு அருகே இருசக்கர வாகனத்தின் மீது, சரக்கு வாகனம் மோதிய விபத்தில் இருவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா்.

News image
Updated On :29 நவம்பர் 2020, 11:07 pm

DIN

பாலக்கோடு அருகே இருசக்கர வாகனத்தின் மீது, சரக்கு வாகனம் மோதிய விபத்தில் இருவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள பாறையூரைச் சோ்ந்த விவசாயி முருகன் (50). மனைவி அமரா. இந்த தம்பதியின் மகன் சுரேஷ் (28). இவா், அங்குள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இந்த நிலையில், முருகன், சுரேஷ், வாழைத் தோட்டத்தைச் சோ்ந்த மாரிமுத்து (55) ஆகியோா் இருசக்கர வாகனத்தில் பெல்ரம்பட்டியிலிருந்து பாறையூா் நோக்கி சென்றுக் கொண்டிருந்தனா்.

அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு வாகனம், இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், பலத்த காயம் அடைந்த முருகன், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மாரிமுத்து, சுரேஷ் ஆகியோா் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். ஆனால், சிறிது நேரத்திலேயே மாரிமுத்து உயிரிழந்தாா். விபத்து குறித்து, மாரண்டஅள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.