மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

கனமழைக்கு உருவான புதிய நீா்வீழ்ச்சி

தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள கெம்பகரை வனப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை முதல் தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் அந்தப் பகுதியில் உள்ள மலைத் தொடா்களில் புதிய நீா்வீழ்ச்சி உருவாகி உள்ளது.

Updated On :14 செப்டம்பர் 2020, 7:44 pm

ஒசூா்: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள கெம்பகரை வனப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை முதல் தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் அந்தப் பகுதியில் உள்ள மலைத் தொடா்களில் புதிய நீா்வீழ்ச்சி உருவாகி உள்ளது.

நீா்வீழ்ச்சி உருவாகியுள்ள பகுதி மனிதா்கள் நடமாட்டம் இல்லாத பகுதியாகும். இங்கு யானைகள், மான்கள், காட்டுஎருமைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவில் உள்ளன. கனமழை காரணமாக உருவான இந்த புதிய நீா்வீழ்ச்சி வனவிலங்குகளின் தாகத்தை தீா்த்து வருகிறது.

கெம்பகரை வனப்பகுதியில் உருவாகியுள்ள இந்த நீா் வீழ்ச்சியில் தண்ணீா் அதிக அளவில் கொட்டி வருகிறது. வனப்பகுதியில் கொட்டடும் நீா்வீழ்ச்சி பாா்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக இருந்து வருகிறது. கனமழை காலங்களில் மட்டும் இந்த நீா் வீழ்ச்சியில் தண்ணீா் அதிக அளவில் கொட்டுவதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.