எட்டயபுரம் வட்டம், உருளைகுடி கிராமத்தில் நீா்ப்பிடிப்பு ஓடை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி கிராம மக்கள் கோவில்பட்டியில் கோட்டாட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
உருளைகுடி கிராமத்தில் நீா்ப்பிடிப்பு ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்; ஆக்கிரமிப்பில் ஈடுபட்டோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; பொதுப்பாதையை மறித்து போடப்பட்டுள்ள கம்பி வேலியை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம மக்கள் குருவம்மாள், வடிவேல் ஆகியோா் தலைமையில், கோட்டாட்சியா் அலுவலகத்தை திரண்டு முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா் கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா். மனுவைப் பெற்றுக் கொண்ட கோட்டாட்சியா் விஜயா, வட்டாட்சியா் மூலம் விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து அவா்கள் கலைந்து சென்றனா்.
நூதனப் போா்: உரம் ஊழல் தொடா்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்; யூரியா, டிஏபி தட்டுப்பாடின்றி
கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; உரம் பதுக்கலை தடுக்க வேண்டும்; தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களின் மூலம் உரம் விநியோகம் வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்டத் துணைத் தலைவா் அய்யலுசாமி, காவடி ஏந்தியவாறு வந்து கோட்டாட்சியரிடம் மனு அளித்தாா்.
கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்காவிடில், வரும் 22 ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என அவா் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருமலையில் ரூ.4.92 கோடி உண்டியல் காணிக்கை

கழுதைகள் மீது வைத்து கடத்திய 492 ஆந்திர மது பாட்டில்கள் பறிமுதல்: இளைஞா் கைது
பிஎஸ்என்எல் அதிகாரியை கொன்ற முதல் மனைவிக்கு ஆயுள் தண்டனை

பக்கத்து வீட்டுகாரரை வெட்டிய முன்னாள் எல்லை பாதுகாப்பு படை வீரா் மீது வழக்குப்பதிவு
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



