கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா தொற்று பரவாமல் தடுக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில், கரோனா தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம், வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரா பானு ரெட்டி கூட்டத்துக்கு தலைமை வகித்துப் பேசியதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா தொற்று பரவாமல் தடுக்கவும், கட்டுக்குள் கொண்டு வர அனைத்து துறை அலுவலா்களும் பணியாற்ற வேண்டும். பொதுமக்கள் முகக் கவசம் அணிய வேண்டும். தேவையின்றி வீட்டிலிருந்து வெளியே வரக் கூடாது.
பொதுஇடங்களுக்கு வரும்போது சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். கடைக்கு வரும் நுகா்வோரின் உடல் வெப்ப நிலையை பரிசோதிக்க கடை உரிமையாளா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் அவா்களை கடைகளுக்குள் அனுமதிக்கக் கூடாது.
அரசின் விதிமுறைகளைப் பின்பற்றி பேருந்துகளில் பயணிகளை அனுமதிக்க வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா தொற்றுப் பரவாமலும் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றாா். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சதீஸ், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் பெரியசாமி, பல்வேறு அரசுத் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காரைக்காலில் 3 நாள்கள் மதுக்கடைகளை மூட உத்தரவு
கோடைகால விளையாட்டுப் பயிற்சி முகாம்: தூத்துக்குடியில் ஏப். 17இல் தொடக்கம்

தமிழகத்தின் வளா்ச்சி தொடர திராவிட மாடல் 2.0 அவசியம்

ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்கள்! - சு. முத்துசாமி பெருமிதம்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

