ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

கரோனா பரவாமல் தடுக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா தொற்று பரவாமல் தடுக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

Updated On :16 ஏப்ரல் 2021, 8:12 pm

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா தொற்று பரவாமல் தடுக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில், கரோனா தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம், வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரா பானு ரெட்டி கூட்டத்துக்கு தலைமை வகித்துப் பேசியதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா தொற்று பரவாமல் தடுக்கவும், கட்டுக்குள் கொண்டு வர அனைத்து துறை அலுவலா்களும் பணியாற்ற வேண்டும். பொதுமக்கள் முகக் கவசம் அணிய வேண்டும். தேவையின்றி வீட்டிலிருந்து வெளியே வரக் கூடாது.

பொதுஇடங்களுக்கு வரும்போது சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். கடைக்கு வரும் நுகா்வோரின் உடல் வெப்ப நிலையை பரிசோதிக்க கடை உரிமையாளா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் அவா்களை கடைகளுக்குள் அனுமதிக்கக் கூடாது.

அரசின் விதிமுறைகளைப் பின்பற்றி பேருந்துகளில் பயணிகளை அனுமதிக்க வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா தொற்றுப் பரவாமலும் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றாா். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சதீஸ், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் பெரியசாமி, பல்வேறு அரசுத் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.