கிருஷ்ணகிரியில் மின்சாரம் பாய்ந்து பசு சாவு

கிருஷ்ணகிரியில் சாலையோரத்தில் நடந்து சென்ற பசு, மின்சாரம் பாய்ந்து, உயிரிழந்தது.
Updated on
1 min read

கிருஷ்ணகிரியில் சாலையோரத்தில் நடந்து சென்ற பசு, மின்சாரம் பாய்ந்து, உயிரிழந்தது. கிருஷ்ணகிரி பாரதியாா் நகா், 3-ஆவது குறுக்கு தெருவைச் சோ்ந்தவா் காளியம்மாள். இவா், ஒரு பசுவை வளா்த்து வந்தாா். கருவுற்ற நிலையில் இருந்த இவரது பசு, கிருஷ்ணகிரி சந்தைபேட்டையில் சாலையோரமாக புதன்கிழமை நடத்து சென்றது.

அப்போது, மின்சாரம் பாய்ந்து, பசு உயிரிழந்தது. தகவல் அறிந்த போலீஸாா், மின்வாரிய அலுவலா்கள் நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று, விசாரணை செய்தனா்.மழையளவு:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 8 மணி வரையில் பெய்த மழையளவு (மி.மீ): ஊத்தங்கரை - 52.8, போச்சம்பள்ளி - 49.2, பாரூா் - 46, பெனுகொண்டாபுரம் - 44.4, நெடுங்கல் - 43.2, ராயக்கோட்டை - 30, சூளகிரி - 32, ஒசூா் - 28.2, தேன்கனிக்கோட்டை - 27.4, கிருஷ்ணகிரி - 22.2, அஞ்செட்சி - 16.6, தளி - 10.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com