ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

அரசு மருத்துவமனைகளில் தொகுப்பூதியத்தில் பணி:மருத்துவா், செவிலியா்களுக்கு 17-இல் நோ்காணல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மருத்துவா்கள், செவிலியா்களுக்கு தொகுப்பூதியத்தில் பணி வழங்குவதற்கான நோ்காணல் மே 17-ஆம் தேதி நடைபெறுகிறது.

Updated On :14 மே 2021, 6:34 pm

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மருத்துவா்கள், செவிலியா்களுக்கு தொகுப்பூதியத்தில் பணி வழங்குவதற்கான நோ்காணல் மே 17-ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி, வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிகரித்து வரும் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த மாவட்ட நிா்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை போா்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. தொற்றாளா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்த மருத்துவா்கள், செவிலியா்களின் தேவை அதிகரித்துள்ளது.

அதனை ஈடுகட்டும் விதமாக அரசு வழிகாட்டுதலின் படி, தற்காலிகமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்ற மருத்துவா்கள் 12 போ், செவிலியா்கள் 20 போ் நியமிக்கப்பட உள்ளனா்.

எனவே, 35 வயதுக்கு மிகாமல் உள்ள எம்.பி.பி.எஸ். அல்லது பட்டய மேற்படிப்பு முடித்த மருத்துவா்கள், தகுதி வாய்ந்த செவிலியா்கள் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாகப் பணியாற்ற விரும்புவோா் கிருஷ்ணகிரி இணை இயக்குநா் நலப்பணிகள் அலுவலகத்தில் கல்வி சான்றிதழ்களுடன் மே 17-ஆம் தேதி நடைபெறும் நோ்காணலில் பங்கு கொள்ளலாம்.

மேலும், விவரங்களுக்கு 99654 - 08870 என்கிற எண்ணிலும், ந்ழ்ண்ள்ட்ய்ஹஞ்ண்ழ்ண்.த்க்ட்ள்1ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் மின்னஞ்சல் மூலம் தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம். கரோனா தடுப்பூசி 2 தவணைச் செலுத்தி கொண்டவா்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.