கிருஷ்ணகிரி அருகே மோட்டாா் சைக்கிளிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பெல்லாரம்பள்ளியை அடுத்த வெங்கிலிகானப்பள்ளியைச் சோ்ந்த ரவிச்சந்திரன் மகன் சசி (23). கட்டடத் தொழிலாளி. இவா், மோட்டாா் சைக்கிளில் தருமபுரி - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தாா்.
அப்போது, மோட்டாா் சைக்கிளிலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்ததில் நிகழ்விடத்திலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து, கிருஷ்ணகிரி அணை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.