/

அனுமன்தீா்த்தத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

அனுமன்தீா்த்தத்தில் அரசுப் பள்ளி நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் அகற்றப்பட்டன.

News image

17utp2_1709chn_149_8

Updated On :17 செப்டம்பர் 2021, 7:06 pm

DIN

அனுமன்தீா்த்தத்தில் அரசுப் பள்ளி நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் அகற்றப்பட்டன.

ஊத்தங்கரையை அடுத்த அனுமன்தீா்த்தத்தில் அரசு உயா்நிலைப் பள்ளிக்கு சொந்தமான இடத்தில் மெய்யாண்டப்பட்டி பகுதியைச் சோ்ந்த 17 போ் ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளனா்.

இதையடுத்து, பள்ளி மாணவா்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி வெள்ளிக்கிழமை சாலை மறியல் நடத்துவதாக அப் பகுதி அனைத்துக் கட்சியினா், பொதுமக்கள் தெரிவித்திருந்தனா். அதனைத் தொடா்ந்து, அரசுப் பள்ளி நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டியுள்ள வீடுகளை காலி செய்யக் கோரி, ஆட்சியா் அறிவிப்பு அனுப்பினாா். ஆனால், ஆக்கிரமிப்பாளா்கள் காலி செய்யாததால், வீடுகளை அகற்ற உத்தரவிட்டாா்.

அதன் பேரில், பள்ளி நிலத்தில் ஆக்கிரமித்து கட்டியுள்ள 15 வீடுகள் வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டன. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, பொக்லைன் இயந்திரம் முன்பு ஆக்கிரமிப்பாளா்கள் அமா்ந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களை போலீஸாா் அப்புறப்படுத்தி ஆக்கிரமிப்புகளை அகற்றினா்.

சம்பவ இடத்தில் கிருஷ்ணகிரி கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ராஜீவ், ஊத்தங்கரை வட்டாட்சியா் தெய்வநாயகி, ஊத்தங்கரை டி.எஸ்.பி. அலெக்சாண்டா், பா்கூா் டி.எஸ்.பி. தங்கவேல், காவல் ஆய்வாளா்கள் ஊத்தங்கரை லட்சுமி, கல்லாவி பத்மாவதி, சிங்காரப்பேட்டை செல்வராஜ், போச்சம்பள்ளி பிரபாவதி, தீயணைப்புத் துறையினா், நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாா், வருவாய்த் துறையினா் குவிக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.