கிருஷ்ணகிரியில் இரு கார்கள் மோதிக்கொண்டு ஏற்பட்ட விபத்தில் இருவர் பலியாகினர்.
பெங்களூரை சேர்ந்தவர் அனில் குமார் (49), இவரது மனைவி அபர்ணா(39).இவரது மகள்கள் அகான்ஷா(17), அக்ஷரா (10), உறவினர் ரம்யா (33) இவர்கள் ஒரு காரில் சென்னையில் இருந்து பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
இதையும் படிக்க | 100 கோடி பயனாளர்களைக் கடந்த டெலிகிராம் செயலி!
கிருஷ்ணகிரியை அடுத்த மாதேப்பள்ளி அருகே சென்று கொண்டிருந்த போது
பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி சென்றுகொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து எதிர்திசையில் அனில்குமார் சென்று காரின் மீது வேகமாக மோதியது.
இந்த சாலை விபத்தில் அக்ஷரா, ரம்மியா ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த அணில் குமார், அபர்ணா, அகான்ஷா ஆகியோர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காவல்துறையினர் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.