ஒசூர் அருகே ஐந்தாவது சிப்காட்டுக்கு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் ஐந்தாவது சிப்காட் அமைக்க 3,800 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த விவசாயிகளுக்கு அரசு சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதனை அறிந்த விவசாயிகள் உத்தனப்பள்ளி கிராமத்தின் ஒசூர் - ராயக்கோட்டை சாலையில் ஞாயிற்றுக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒசூரில் உள்ள மூன்றாவது சிப்காட் மற்றும் நான்காவது சிப்காட்டில் தொழிற்சாலைகள் அமைக்காத போது ஐந்தாவது சிப்காட்டுக்கு நிலம் கையகப்படுத்துவது ஏன் என அவர்கள் கேள்வி எழுப்பினர். இதையடுத்து அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் வைத்துள்ளனர்.

இதுகுறித்து உத்தம பள்ளி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயசசந்திர பானு ரெட்டியை கண்டித்து கடும் எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அந்தச் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜீது முண்டாவை ஞாபகப்படுத்திய கர திரைப்படம்..! மாரி செல்வராஜ் புகழாரம்!

கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் படத்தின் பெயர் அறிவிப்பு!

விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
மே நாள் வாழ்த்து: உழைப்புச் சுரண்டலுக்கு எதிராக அணி திரள்வோம்! - பெ. சண்முகம்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


