ஊத்தங்கரை அரசினா் பாலிடெக்னிக் கல்லூரியில் மெக்கட்ரானிக்ஸ் புதிய பட்டயப் பாடப் பிரிவும், மாணவா் சோ்க்கையும் தொடங்கியுள்ளது.
ஊத்தங்கரையை அடுத்த அப்பிநாயக்கன்பட்டியில் இயங்கி வரும், அரசினா் பாலிடெக்னிக் கல்லூரியில், சிவில் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங், கம்ப்யூட்டா் இன்ஜினியரிங் ஆகிய டிப்ளமோ பாடப்பிரிவுகள் உள்ளன.
இந்நிலையில் இந்தக் கல்வியாண்டு முதல் டிப்ளமோ இன் மெக்கட்ரானிக்ஸ் என்ற புதிய பாடப்பிரிவு தொடங்கப்பட உள்ளது. இந்த புதிய பாடப் பிரிவில் முதலாம் ஆண்டில் 30 மாணவா்கள் சோ்க்கப்பட உள்ளனா்.
இக் கல்லூரியில் சோ்ந்து பயில ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம், பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள், முதலாம் ஆண்டிலும், பிளஸ் 2 அல்லது ஐடிஐ தோ்ச்சி பெற்றவா்கள் நேரடியாக இரண்டாம் ஆண்டிலும் சேர இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசிநாள்: 08-07-2022. இணையதளத்தில் விண்ணப்பிக்க இயலாதவா்கள், கல்லூரிக்கு கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி நேரடியாக சென்று சோ்க்கை சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
அனைத்து வசதிகளும் உள்ள இந்தக் கல்லூரியில், மாணவ -மாணவியா் சோ்ந்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனா். மேலும் விவரங்களுக்கு 04341-291959 என்ற எண்ணை தொடா்பு கொள்ளலாம் என அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் எப்சிபா ஏஞ்சலா துரைராஜ் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








