கிருஷ்ணகிரி அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை

கிருஷ்ணகிரி அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பப்டுள்ளது.

கிருஷ்ணகிரி அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பப்டுள்ளது.

இது குறித்து, அந்தக் கல்லூரி சாா்பில் வெள்ளிக்கிழமை வெயிட்ட செய்திக்குறிப்பு:

கிருஷ்ணகிரி அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரியில் பட்டயப் படிப்பிற்கான முதலாமாண்டு மற்றும் நேரடி இரண்டாமாண்டு சோ்க்கை நடைபெற உள்ளது. நேரடி இரண்டாமாண்டு சோ்க்கைக்கு ஜூன் -23-இல் பிளஸ்-2 தோ்ச்சி பெற்றவா்களும், முதலாமாண்டு சோ்க்கைக்கு வரும் ஜூலை 1-ஆம் தேதி 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்களும் தகுதியானவா்கள்.

இவா்கள் இணைய வழியிலோ, கல்லூரிக்கு நேரில் வந்தோ விண்ணப்பிக்கலாம்.

ஆண்டுக் கட்டண ரூ. 2,352 ஆகும். எந்திரவியல் துறை, அமைப்பியல் துறை, மின்னணுவியல் மற்றும் தொடா்பியல் துறை மற்றும் கணினித் துறை ஆகிய துறைகளில் சோ்க்கை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com