கிருஷ்ணகிரி அருகே மலைப்பாம்பின் பிடியில் இருந்து தப்பிக்க முயன்ற இருவர் கிணற்றில் தவறி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தில் அடுத்த குட்டப்பட்டி அருகே உள்ளது மேல் கொட்டாய் கிராமம். இந்த கிராமத்தில் இன்று காலை ஒரு மலைப்பாம்பு ஊர்ந்து செல்வதை சிலர் கண்டனர். அப்போது அங்கிருந்த இருவர் மலைப் பாம்பை உயிருடன் பிடிக்க முயன்றனர்.

இதில், எதிர்பாராதவிதமாக மலைப்பாம்பு ஒருவரை பிடித்து, தனது உடலால் சுற்றி முழுங்க முயன்றது. மலைப்பாம்பு பிடியிலிருந்து இருவரும் தப்ப முயன்றபோது மலைப்பாம்புடன் அருகில் உள்ள கிணற்றில் விழுந்தனர்.

இதையடுத்து, அங்கு கூடிய கிராம மக்கள் கிணற்றில் உள்ள 20 அடி ஆழ நீரை வெளியேற்றி மலைப்பாம்புடன் இருவரையும் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.

எனினும், அதில் நடராஜ்(60) என்பவர் பலியானார். மற்றொருவர் நிலைமை தெரியவில்லை. மேலும் இதுகுறித்து கிருஷ்ணகிரி தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்படடது. கிருஷ்ணகிரி அருகே மலைப்பாம்பின் பிடியிலிருந்து தப்ப முயன்ற இருவர் கிணற்றில் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இன்றைய செய்திகள் ஜூன் 19 - நேரலை!
மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
மேக்கேதாட்டு அணைக்கு எதிர்ப்பு! பேரவையில் முதல் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் விஜய்!

பிரான்ஸ், ஸ்லோவாக்கியா பயணத்திற்குப் பிறகு நாடு திரும்பினார் பிரதமர் மோடி!
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



