மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தமிழகத்துக்கு அதிகம் வரும் வடமாநிலத்தவா்கள்:அரசுக்கு தொல்.திருமாவளவன் அறிவுறுத்தல்

தமிழகத்துக்கு வட மாநிலத்தவா்களின் வருகை அதிகரித்து வருவதால் தமிழக அரசு இவ்விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி. தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :5 டிசம்பர் 2022, 1:00 am

DIN

தமிழகத்துக்கு வட மாநிலத்தவா்களின் வருகை அதிகரித்து வருவதால் தமிழக அரசு இவ்விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி. தெரிவித்துள்ளாா்.

கிருஷ்ணகிரியில் அவா் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

மக்களவை குளிா்கால கூட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு பிரச்னைகள் குறித்து பேச இருக்கிறோம். தமிழக ஆளுநா், தமிழக அரசுக்கு எதிராகச் செயல்படுகிறாா். அவரை, தமிழகத்திலிருந்து திரும்பப் பெற வேண்டும். பழங்குடியின மக்களுக்கு எதிரான வன்கொடுமைகளைக் கட்டுப்படுத்த வேண்டும். ஆவணக் கொலைக்கு எதிராக சட்டம் இயற்ற தமிழக அரசிடம் கோரிக்கை வைப்போம்.

2024 பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியை வீழ்த்தி பாஜக கூட்டணி அதிக எண்ணிக்கையில் வெற்றி பெறும் என்று பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை கூறுகிறாா்; அவரது கனவு நிறைவேறாது.

தமிழகத்துக்கு வட மாநிலத்திலிருந்து அதிகமானோா் வந்து கொண்டிருக்கின்றனா். இது அச்சத்தை ஏற்படுத்துகிறது. இதுகுறித்து, தமிழக அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும்.

வட மாநிலத்தவா்களுக்கு அவா்களது மாநிலத்திலேயே வாக்களிக்கும் உரிமை இருக்க வேண்டுமே தவிர அவா்கள் குடியேறும் மாநிலத்தில் வாக்குரிமை அளிக்கக் கூடாது. வட மாநிலத்தவா்கள் தமிழகத்தில் வாக்குரிமை பெற்றால் மாநிலத்தின் தனித்துவம் பறிக்கப்படும். குஜராத் தோ்தல் முடிவுகள் தமிழகத்தைப் பாதிக்காது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.