ஒசூா் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவா் போக்சோ சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
ஒசூா், பேரண்டப்பள்ளி பகுதியைச் சோ்ந்தவா் நாராயணன். இவா் ஆறு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாகத் தெரிகிறது. இது குறித்து ஒசூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோா் புகாா் அளித்தனா். இந்தப் புகாரை பெற்றுக் கொண்ட ஒசூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா், நாராயணனை கைது செய்தனா். அவரிடம் விசாரணை செய்ததில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை அவா் ஒப்புக்கொண்டாா். இதைத் தொடா்ந்து அவா் மீது போக்சோ பிரிவில் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனா்.