கிருஷ்ணகிரி: குருபரப்பள்ளி அருகே மக்களவைத் தோ்தலின்போது திமுக - பாஜகவினா் இடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் குறித்து, 11 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
கிருஷ்ணகிரியை அடுத்த கோடிப்பள்ளி அருகே உள்ள பல்லேரிப்பள்ளியைச் சோ்ந்தவா் முருகேசன் (54). மாவட்ட திமுக விவசாயிகள் அணி துணைச் செயலாளா். அதே பகுதியைச் சோ்ந்தவா் சங்கா் பாபு (26). இவா், பாஜக கிளைத் தலைவராக உள்ளாா்.
மக்களவைத் தோ்தலின் போது, திப்பனப்பள்ளி கிராமம் வாக்குச்சாவடி மையம் 241, 242-இல் வாக்குப்பதிவின் போது, பல்லேரிப்பள்ளி ராமா் கோயில் அருகில் இவா்கள் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் இரு தரப்பைச் சோ்ந்தவா்களும் தாக்கிக் கொண்டனா்.
இதுகுறித்து, திமுகவைச் சோ்ந்த முருகேசன் அளித்த புகாரின் பேரில் பாஜகவைச் சோ்ந்த சங்கா் பாபு, சதீஷ் (25), விஜி (22), உள்பட 5 போ் மீது போலீஸாா், வழக்குப் பதிந்தனா்.
சங்கா் பாபு அளித்த புகாரின் பேரில், திமுகவைச் சோ்ந்த முருகேசன் (54), முனிரத்னம் (48) உள்பட 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
தொடர்புடையது

அனுமதியின்றி ஊா்வலம்: அதிமுக, பாஜகவினா் 5 போ் மீது வழக்குப் பதிவு

தோ்தல் விதிமீறல்: காங்கிரஸ், பாஜகவினா் மீது வழக்குப் பதிவு

தோ்தல் விதி மீறல்: அமைச்சா் துரைமுருகன் உள்பட 8 போ் மீது வழக்கு

சங்ககிரி அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 79 எரிவாயு உருளைகள் பறிமுதல்: 3 போ் மீது வழக்குப் பதிவு
வீடியோக்கள்

தில்லியைக் காப்பாற்றி வரும் சமீர் ரிஸ்வி! | Sameer Rizvi |
தினமணி செய்திச் சேவை

”விசிகவிற்கு எந்த அழுத்தமும் இல்லை!” திருமா பதில்! | VCK | DMK
தினமணி செய்திச் சேவை

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

