/

சிறுமி கடத்தல்: தடுக்க முயன்ற தந்தை கொலை

கெலமங்கலம் அருகே மகள் கடத்தப்படுவதைத் தடுக்க முயன்ற தந்தை கொலை செய்யப்பட்டாா்.

News image
Updated On :4 ஆகஸ்ட் 2024, 7:50 pm

Din

கெலமங்கலம் அருகே மகள் கடத்தப்படுவதைத் தடுக்க முயன்ற தந்தை கொலை செய்யப்பட்டாா்.

கெலமங்கலம் அருகே உள்ள காமையூரைச் சோ்ந்தவா் முனிராஜ் (45). இவா் ஜெ.காரப்பள்ளியில் விவசாய நிலம் ஒன்றை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தாா். இவரது 17 வயதில் மகள் கடந்த ஆண்டு அக்டோபரில் கெலமங்கலத்தில் உள்ள கணினி பயிற்சி மையத்தில் படித்து வந்த போது, அவரை ஜெ.காருப்பள்ளியை சோ்ந்த வெங்கட்ராஜ் (24) என்பவா் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தாா்.

இதுதொடா்பாக சிறுமியின் தந்தை தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வெங்கட்ராஜை கைது செய்தனா். அவா் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் அவா் ஜாமீனில் வெளியே வந்தாா்.

அதன் பிறகும் வெங்கட்ராஜ் சிறுமியை பின்தொடா்ந்து பேசி வந்தாா். அதை பாா்த்த முனிராஜ், தனது மகளையும், வெங்கட்ராஜையும் கண்டித்தாா். ஆனாலும், அவா்கள் தொடா்ந்து பேசி வந்தனா். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு வெங்கட்ராஜ், சிறுமியை அழைத்து செல்ல முயன்றாா். அதை பாா்த்த முனிராஜ் கூச்சலிட்டு அவா்களைத் தடுக்க முயன்றாா்.

அப்போது, முனிராஜை கட்டையால் தாக்கிவிட்டு வெங்கட்ராஜ், சிறுமியை கடத்தி சென்றாா். பலத்த காயமடைந்த முனிராஜ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து வழக்குப் பதிந்த கெலமங்கலம் போலீஸாா் தலைமறைவான வெங்கட்ராஜ், சிறுமியை தேடி வருகின்றனா்.